ஒன்றாம் வகுப்பு கற்பிக்கும் 50 ஆசிரியர்களை வைத்து இன்று உலகெலாம் தமிழ் என்ற காணொலிக் குறுந்தகட்டின் முன்னோட்டத் திரையிடல் நிகழ்வு நடைபெற்றது.
உயிரெழுத்து பற்றிய அத்தியாயங்களும் திரையில் காட்சிப் படுத்தப்பட்டன. உலகத்திலேயே இதைப் போன்ற முழுமையான காட்சிக் கட்டகம் இதுவரைக்கும் இல்லை.
வந்திருந்த அனைவரும் இருக்கையை விட்டு அகலாமல் அதிசயித்து கண்கள் விரித்து மெய்மறந்து நின்றனர்.
30 அத்தியாயங்கள் கொண்ட இதன் முன்னோட்டத்தை நீங்களும் பாருங்கள்.
இது மட்டும் நடைமுறை யானால் 30 நாட்களில் உலகமே தமிழ் கற்க முடியும்.
பள்ளிக் கல்வித்துறைக்கு ஒப்படைக்கும் முன் மதிப்பீடு செய்வதற்காக இம் முன்னோட்டம் உங்கள் பார்வைக்கு.
ஊடக நண்பர்களும் மிகச் சிறப்பென பாராட்டியதை பெருமிதமாகக் கொள்ளலாம்.
காமெடி,நடிகர்கள், மதம்,சாதி என்ற பிடித்த விஷயங்களை உடனே பகிர்வு (share) செய்கிறீர்கள். தமிழ் பரவ எத்தனை பேர் எத்தனை பேருக்கு பகிர்வு(share) செய்கிறீர்கள் எனப் பார்ப்போம்.
அடுத்த தலைமுறைக்கு தமிழைத் தடையின்றித் தருவோம்.
முற்றிலும் அரசுப்பள்ளி, அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் உழைப்பில் உயிரான மொழிக் காவியம்.
No comments:
Post a Comment