ஊத்தங்கரை ஒன்றியம் ஊ.ஒ.ந.நி.பள்ளி படப்பள்ளியில் 4/4/18 புதன்கிழமை பள்ளியின் ஆண்டுவிழா, அறிவியல் கண்காட்சி,
JRC மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு ஊத்தங்கரை ஒன்றிய உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் திரு.விஜயராஜ் அவர்கள் தலைமை தாங்கினார். கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி மாதேஸ்வரி அவர்கள் முன்னிலை வகித்தார்.விழாவிற்கு தலைமை ஆசிரியர் திருமதி.இர.தாசூன் வரவேற்புரை ஆற்றினார்.ஆசிரியர் கலைச்செல்வன் ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக மத்தூர் ஒன்றிய உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் திரு.முனிரெட்டி
அதியமான் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு.சீனி.
திருமால்முருகன்
அதியமான் மகளிர் கல்லூரி செயலாளர் திருமதி.
ஷோபாதிருமால்முருகன் ,வட்டார வளமைய மேற்பார்வையாளர் திருமதி. வசந்தி, ஆசிரியப் பயிற்றுநர்கள் திருமதி .ஆர்த்தி
திருமதி.வித்யா,
தலைமை ஆசிரியர்கள்
சாந்தி,மலர்,
கலைவாணி,மகேஸ்வரி திரு.கோதண்டம்,
JRC கணேசன் ஆசிரியர்,
சாமுண்டீஸ்வரி ஆசிரியை ஆகியோர் கலந்து கொண்டனர்.
அறிவியல் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர் திரு.ராதாகிருஷ்ணன் சிறப்பாக செய்திருந்தார்.
மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கலைநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பிரதீபா,அறிவழகி,
ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
விழாவில் ஊர் செட்டியார் குப்புசாமி, மோகன்(எ) சின்ராசு, ஊர் நாயக்கர் ஜெயபால், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் திருமதி.சங்கீதா,
இலட்சுமி NGO, ஊர்ப்பொதுமக்கள்,திரளான பெற்றோர்கள்,பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.
விழா நிறைவாக ஆசிரியை அருளரசி நன்றியுரை ஆற்றினார்.
No comments:
Post a Comment