எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா!!

Monday, April 16, 2018


2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் மாதனுர் ஒன்றியத்தை சேர்ந்த 10 மாணவர்களுக்கு ஆம்பூர் உமர்சலை நகராட்சி தொடக்கப்  பள்ளியில் இன்று பாராட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது..
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கூடுதல் மற்றும் உதவி தொடக்க கல்வி அலுவலர் அவர்கள்
சான்றிதழ்களும்,கேடயமும் வழங்கப்பட்டது.



தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது அதிக மாணவர்கள்  தேர்ச்சி பெற்று மாதனுர் ஒன்றியத்திற்கு பெருமை சேர்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..



விழாவில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக NMMS பயிற்சி கையேடு வழங்கிய பெத்லகேம் பள்ளி ஆசிரியர் திரு.சரவணன் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இவ்விழாவில் தலைமை ஆசிரியர்கள் திரு.ரவிச்சந்திரன்,திருமதி.மகேஸ்வரி, திரு.ஜோசத்தியகுமார்,திருமதி.நதியா,திரு.ஜானகிராமன்,திரு.ராஜன் கென்னடி,திருமதி.பாக்கியஸீலா,திரு.பிராங்கிளின்,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..



இறுதியாக ஆம்பூர் உமர்சலை நகராட்சி தொடக்கப்  பள்ளி தலைமை ஆசிரியர் திரு.பக்தவச்சலு நன்றி கூறினார்..

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One