எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

முதுநிலை மருத்துவப் படிப்பு: சலுகை மதிப்பெண் வழங்க உத்தரவு

Monday, April 23, 2018

மகப்பேறு விடுப்பை பணிக்காலமாக கருத்தில் கொண்டு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் சலுகை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 சென்னை உயர்நீதிமன்றத்தில் அருணா உள்ளிட்ட 6 அரசு பெண் மருத்துவர்கள், இரண்டு ஆண்டு பணிக்காலத்தில் மகப்பேறு விடுப்பு எடுத்த பெண் மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் கூடுதல் மதிப்பெண் வழங்க மறுப்பதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தனர். இதே கோரிக்கை தொடர்பாக வேறு சிலர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், மகப்பேறு விடுப்பு காலத்தை பணிக்காலமாக கருதி பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
 இந்த நிலையில் மருத்துவர் அருணா உள்ளிட்டவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், மகப்பேறு விடுப்பு எடுக்க பெண் மருத்துவர்களுக்கு உரிமை உள்ளது. அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவது குறித்து முடிவெடுக்க வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்திருந்தார்.
 இதைத் தொடர்ந்து நீதிபதிகள் ஹுலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் எம்.தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெண் ஊழியர்களையும் அவர்களின் சிசுக்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. எனவே, அந்த விடுப்பு காலத்தையும் பணிக்காலமாக கருத்தில் கொண்டு மருத்துவ மேற்படிப்புக்கான சேர்க்கையில் சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One