எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளிக் கல்வித்துறையிடம் உரிய முன் அனுமதி பெற்ற பிறகே கல்விச் சுற்றுலா: விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகள்

Wednesday, May 9, 2018

சென்னை: உரிய முன் அனுமதி பெற்ற பிறகே பள்ளி மாணவர்களை கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ள பள்ளிக் கல்வித்துறை,  அதற்கென கடும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

'பள்ளி மாணவர்களைச் சுற்றுலா அழைத்துச் செல்வது குறித்து அரசுக் கடிதம் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரால் விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டு கல்வித்துறை அதிகாரிகள் மூலம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன.

ஏற்கெனவே அறிவுரைகள் வழங்கப்பட்டும், பள்ளி நிர்வாகங்கள் அதனைப் பின்பற்றாமல் உரிய அனுமதியின்றி பள்ளி மாணவர்களைச் சுற்றுலா அழைத்துச் செல்லும் போது ஏற்படும் கவனக்குறைவினால் விலைமதிப்பில்லாத குழந்தைகளின் உயிரிழப்பு ஏற்படுவதும் நடைபெறுகிறது.

இது போன்ற செயல்களுக்கு பள்ளித் தாளாளர் மற்றும் முதல்வரே முழுப் பொறுப்பாவார். மாணவர்களைச் சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டுமெனில் நிபந்தனைகளுக்குட்பட்டு துறையின் உரிய முன் அனுமதி பெற்ற பின்னரே அழைத்துச் செல்ல வேண்டும்  என ஏற்கெனவே திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தற்போது சென்னையிலுள்ள ஈசிஐ மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களைத் துறையின் எவ்வித முன் அனுமதியும் பெறப்படாமல் மகாராட்டிர மாநிலம் பூனேவிலுள்ள முல்சிஅணைக்கு அழைத்துச் சென்ற போது அதில் துரதிஷ்டவசமாக 8-ம் வகுப்பில் பயின்ற 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இது மிகவும் வருத்தமளிக்கும் நிகழ்வாகும்.

முன் அனுமதியின்றி மாணவர்களைச் சுற்றுலா அழைத்து சென்றமைக்கும், மாணவர்களின் விலைமதிப்பில்லாத உயிரிழப்பிற்கும் பள்ளி நிர்வாகமே காரணமாக இருந்துள்ளது. இது போன்ற செயல்கள் இனி வரும் காலங்களில் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

* சுற்றுலா செல்ல உத்தேசித்துள்ள நாளுக்கு 2 மாதங்களுக்கு முன்னதாகவே அதற்கான திட்டமிடல் பணி தொடங்கப்பட வேண்டும். சுற்றுலா செல்லவுள்ள இடம் மற்றும் நாட்கள் குறித்த அட்டவணை பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தி கூட்டத்தில் ஒருமித்த கருத்துடன் திட்டமிடப்பட வேண்டும். சுற்றுலாவின் கால அளவு எக்காரணம் கொண்டும் 4 நாட்களுக்கு மிகக்கூடாது.

* பருவநிலை மற்றும் வானிலை அறிக்கை ஆகியவற்றைக் கொண்டு சுற்றுலாவிற்கான இடம் தேர்வு செய்யப்பட வேண்டும். சுற்றுலா செல்லவுள்ள நாள், இடம் மற்றும் வாகனம் முடிவு செய்யப்பட்டவுடன் அதுகுறித்து சுற்றுலாவிற்கு வரும் அனைத்துக் குழந்தைகளின் பெற்றோரிடமும் எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டு அவர்களின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

* சுற்றுலா செல்லவுள்ள இடம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக்கூறி அந்த இடங்களில் எவ்வாறு பாதுகாப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து வகுப்பு எடுக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அன்று செல்லவுள்ள இடம், அங்கு எவ்வாறு பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதையும், அங்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டால் தற்கொத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வையும் மாணவர்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும்.

* சுற்றுலா செல்லவுள்ள இடத்தில் ஏதேனும் பாதுகாப்பு உபகரணங்கள் தேவைப்படின் அதை ஒவ்வொரு மாணவரும் எடுத்துச் செல்வதையும் உறுதி செய்ய வேண்டும்.

* 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் பாதுகாப்பாளராகச் செல்ல வேண்டும். மாணவிகள் சுற்றுலாவில் பங்குபெற்றால் 10 மாணவிகளுக்கு ஒரு பெண் ஆசிரியை வீதம் உடன் செல்ல வேண்டும்.

ஆறு, ஏரி, குளம், குட்டை, அருவி மற்றும் கடல் போன்ற நீர்நிலைப் பகுதிகளுக்கு செல்லக் கூடாது.

* மக்கள் நெரிசல் அதிகம் உள்ள இடங்களுக்குச் செல்வது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். பேருந்து மூலம் சுற்றுலா செல்லும் போது பேருந்து முறையாகத் தரச்சான்று பெற்ற வாகனமா என்பதையும், போதிய அனுபவமுள்ள ஓட்டுநர் நியமிக்கப்பட்டுள்ளாரா என்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

* பேருந்து மூலம் செல்லும் போது இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பேருந்துப் பயணம் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

சுற்றுலா செல்லும் மாணவர்களுடன் முதலுதவி பயிற்சி பெற்ற ஒரு ஆசிரியர் உடன் செல்ல வேண்டும். முதலுதவிக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் உடன் கொண்டு செல்லப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One