புதுக்கோட்டையில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.....
புதுக்கோட்டை,மே.18:தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா எதிரே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது..ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் வரவேற்றுப் பேசினார்....மாவட்டத் தலைவர் லாசர் முன்னிலை வகித்தார்..மாவட்ட செயலாளர் செந்தில் வாழ்த்துரை வழங்கினார்.மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் ரமேஷ்குமார் கலந்து கொண்டு பேசியதாவது: பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் பணிநிரவலை உடனடியாக கைவிட வேண்டும்..1997 ஆம் ஆண்டு வரை கடைப்பிடிகப்பட்ட ஆசிரியர் மாணவர் விகிதம் 1:20 என்பதை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்..கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் அரசு நிதியை தனியார் பள்ளிகளுக்கு வழங்குவதை நிறுத்த வேண்டும்.ஒளிவு மறைவற்ற வெளிப்படையான பொது மாறுதல் கலந்தாய்வினை நடத்திட வேண்டும் என்றார்.. ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஒன்றிய பொறுப்பாளர்கள்,நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.. முடிவில் சின்னையா நன்றி கூறினார்
No comments:
Post a Comment